பொங்கல் பரிசு 2023: ரொக்கப்பரிசு தொகையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் – முதல்வரின் சூப்பரான அறிவிப்பு!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பரிசு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது முழு கரும்பும் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளி விடுமுறைகள் நீட்டிப்பு.. ஜனவரி 10ம் தேதி தான் மீண்டும் திறப்பு – மாணவர்களுக்கு குட் நியூஸ்!
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை ரொக்க பரிசாக 1000 ரூபாயும் அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்க பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களிடம் தகவல்கள் பெறப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதே போல் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பும் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் ஜனவரி 3ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9ம் தேதி அன்று பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.