அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் ஜூன் 16ம் தேதி முதல் திறப்பு – தொல்லியல் துறை அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் காரணமாக அனைத்து அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களும் மூடப்பட்டிருந்தது. இவை மீண்டும் திறக்கப்படுவது குறித்து இந்திய தொல்லியல் தற்போது அறிவித்துள்ளது.
தொல்லியல் துறை:
நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பின் எண்ணிக்கை அளவில் உள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு அரசு தடை விதித்திருந்தது.
பெட்ரோல் விலை உயர்வு – தர்மேந்திர பிரதான் விளக்கம்!!
இதனால் நாடு முழுவதும் நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள், தேர்வுகள் போன்ற அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மேலும், அனைத்து பொது இடங்கள், வழிபாட்டு தளங்கள், அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் இங்கு நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் மெல்ல குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து உள்ளது. இதனால் ஊரடங்கில் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களும் திறக்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இருப்பினும், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.