பெட்ரோல் விலை உயர்வு – தர்மேந்திர பிரதான் விளக்கம்!!
இந்தியாவில் நல திட்டங்களுக்காக பணத்தை சேமிக்கிறோம் அதனால் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதில் :
கடந்த வருடங்களை விட தற்போது இந்தியாவில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 கடந்துவிட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலேயே இருப்பது சாமானிய மக்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களில் பெட்ரோல் விலை மிக அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏற்படுத்தும் தாக்கம் – நீதிபதி தலைமையிலான குழு ஆலோசனை!!
உள்ளூர் வரி மற்றும் அவை மீது விதிக்கப்படும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. இந்த பெட்ரோல், டீசல் உயர்வு மக்களைப் பாதித்துள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பேரிடர் காலத்தில் நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை சேமிக்கிறோம் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் ரூ. 35,000 கோடிக்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அரசி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனாவுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமரின் கிசானின் கீழ் சில ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நெருக்கடியான காலங்களில், நலத் திட்டங்களுக்காக செலவிட பணத்தை மிச்சப்படுத்துகிறோம் என பெட்ரோல் விலை உயர்வு குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். இந்த பதில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.