வருண் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் மல்லிகா? அத்தை போடும் திட்டம் – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில், வருண் பற்றிய உண்மை மல்லிகாவுக்கு தெரியப்படுத்த, வருண் மற்றும் சத்யா அவர்களது சொந்த ஊருக்கு கிளம்புகின்றனர். அப்போது வருணின் அத்தை திட்டம் ஒன்றை திட்டுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
மௌன ராகம் ப்ரோமோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில், வருண் மற்றும் சத்யாவின் திருமணத்தை பற்றி மல்லிகாவிற்கு தெரிந்து விட்டது . அவர் இருவரையும் மனதார ஏற்றுக் கொள்கிறார். மேலும் சத்யாவும், வருணும் மனதார ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோசமாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சத்யாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்கள். அதற்கு கார்த்திக் மற்றும் பாட்டியும் வருகை புரிந்தனர்.
நிஜ அப்பாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – குவியும் வாழ்த்துக்கள்!
இவ்வாறு சந்தோசமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில், சத்யா சொந்த ஊருக்கு போக வேண்டும் என நினைக்கிறார். அப்போது வருண் நம்ம இருவரும் சேர்ந்து போகலாம் என சொல்கிறார். வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டு வருண், சத்யா கிளம்புகின்றனர். அப்போது வருண் பற்றி மல்லிகாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வருணின் அத்தை திட்டமிடுகிறார். வேலைக்காரியிடம் சொல்லி மல்லிகாவை ஆரத்தி எடுக்க சொல்லி, பூசணிக்காயில் சூடம் பொருத்தி கொண்டு வருகிறார்.
மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டிற்கு வரும் லட்சுமி அம்மா – அதிர்ந்து போகும் தனம்!!
அதை பார்த்த வருண் பதட்டம் அடைந்து கீழே விழுந்து அழ, சத்யா என்ன செய்வது என்று தெரியாமல் வருணை பிடிக்கிறார். மல்லிகா என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். விஷயம் தெரிந்து மல்லிகா என்ன நினைப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது பற்றி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. மல்லிகாவுக்கு உண்மை தெரிந்து வருணை ஏற்றுக் கொள்வாரா, இல்லை சத்யாவை அழைத்துக் கொண்டு செல்வாரா என அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.