மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டிற்கு வரும் லட்சுமி அம்மா – அதிர்ந்து போகும் தனம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது மீண்டும் லட்சுமி அம்மா வீட்டிற்கு வருவது போல காட்டப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்:
விஜய் டிவியில் பல வித சோக காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இந்த சீரியலில் லட்சுமி அம்மா மறைந்து விடுகிறார். அவரது மறைவிற்கு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தான் காரணம் என்று வீட்டினர் அனைவரும் கொந்தளிக்கின்றனர். கண்ணன் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அம்மா இறந்து போய் இருக்க மாட்டார்கள் என்றும் நினைத்து வருகின்றனர். இது இப்படியாக இருக்க, சந்தர்ப்ப சூழலின் காரணமாக அம்மா மறைந்த செய்தியினை அவருக்கு தெரிவிக்க முடியாமல் போய் விடுகிறது. இதனால் கோபம் அடையும் கண்ணன் அனைவரிடமும் வந்து சண்டை போடுகிறார்.
விஜய் டிவி பிரபல சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – பிக்பாஸ் சீசன் 5 எதிரொலி!
கடைசியாக கூட முகத்தினை பார்க்க விடாமல் செய்து விட்டீர்கள் என்று ஆவேசமாக கத்தி சண்டை போடுகிறார். இதனால் மூர்த்தி உட்பட யாருமே பேச முடியாமல் இருக்கின்றனர். ஆனால், தனம் மட்டும் அவருக்கு எதிராக சண்டை இடுகிறார். மீனா, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் நமது வீட்டில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று மூர்த்தியிடம் கூறுகிறார். தற்போது அனைத்து இறுதி காரியங்களும் முடிந்துள்ள நிலையில் மீண்டும் லட்சுமி அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வருகிறார்.
இன்னும் 7 நாட்கள், விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் விவரம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அதாவது இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் லட்சுமி அம்மா வீட்டிற்கு வருவது போலவும் அவர் தனத்திடம் சில விஷயங்களையும் பேசுகிறார். லட்சுமி அம்மாவை பார்த்து விட்டு தனம் முதலில் அதிர்ச்சி அடைகிறார். பின்னர், அது வெறும் கனவு என்று நினைத்து விட்டு நிம்மதி அடைகிறார். ஏற்கனவே தனது குழந்தையை பார்ப்பதற்குள் அத்தை இறந்து விட்டதால் மிகுந்த சோகத்தில் இருக்கும் தனத்திற்கு இது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. லட்சுமி அம்மா எங்கும் செல்லவில்லை, இந்த வீட்டில் நம்முடன் தான் இருக்கிறார் என குடும்பத்தினருக்கு நினைவூட்டுவதாக இது உள்ளது.