அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக PG மாணவர் சேர்க்கை – ஜூன் 25 கடைசி நாள்!
தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளில் 30 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 25 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. வழக்கமாக புதிய கல்வியாண்டு மே மாதத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஜூன் மாதம் முதல் புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெறும்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வுடன் கடைகள் திறப்பு? இன்று அறிவிப்பு!
ஆனால் கொரோனா பரவல் காரணமாக 2021-22 ஆம் கல்வியாண்டு கால தாமதமாக தொடங்கப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் இன்னும் வெளியிடப்படாத காரணத்தினால் இளங்கலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை. பல கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் முதுகலை, M.phil உள்ளிட்ட 30 வித படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.