தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வுடன் கடைகள் திறப்பு? இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் முழு ஊரடங்கிற்கு பின்னர் அரசு மேலும் சில தளர்வுகளை அளிக்க உள்ளதாகவும், அவற்றில் மதுக்கடைகளை மீண்டுமாக திறப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுக்கடைகள் திறப்பு:
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 1 மாதமாக தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் பரவலின் தாக்கம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இதனால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்கள், உணவகங்கள், அத்தியாவசிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மீண்டுமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜூன் 14 ஆம் தேதியுடன் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு முடிவுக்கு வருவதால், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதன் படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு மீண்டும் அனுமதி கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகள் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தவிர மதுபானம் அருந்துபவர்களும், அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானத்தை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தவிர கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகளும் ஆங்காகே நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க மதுக்கடைகள் மீண்டுமாக திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரு வேளை அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் மதுபானங்களின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்புகள் இன்று (ஜூன் 11) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.