தமிழகத்தில் பரவும் குரங்கு அம்மை நோய் தொற்று? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் பரவல் அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தடுப்பு பணியாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை:
உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. குரங்கு அம்மை ஆனது தோல் கொப்புளங்கள் அல்லது சிரங்குகளை தொடுவதன் வழியாகவும் பரவும். மேலும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த தொற்று நோய் பரவி வருகிறது. காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள் நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் போன்றவை குரங்கு அம்மை பாதித்தற்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளது. இதில் விழித்திரையில் கொப்புளங்கள் ஏற்பட்டால் கண் பார்வை கூட பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Exams Daily Mobile App Download
தற்போது மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளை தொடர்ந்து ஐக்கிய அரபு வந்த 35 வயதுள்ள நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதனால் இந்தியாவிலும் குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தடுப்பு பணியாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – மாதம்: ரூ.20,000/- சம்பளம் || இன்டர்வியூ மட்டுமே !
அதாவது குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு முகம், கைகளில் கொப்பளம் வந்தால் தெர்மல் ஸ்கேன் கேமரா மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் கண்டறியும் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் அமைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.