உலக நாடுகளை அச்சுறுத்தும் நோயாக உருவெடுக்கும் குரங்கு அம்மை – WHO தகவல்!
உலக நாடுகளில் அதிக அளவில் மக்களால் பேசப்பட்டு வரும் குரங்கு அம்மை நோய் தற்போது மேலும் அச்சுறுத்தும் நோயாக உருவெடுத்துள்ளதை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் பேசியுள்ளார்.
குரங்கு அம்மை:
உலக நாடுகளில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் இருக்க கூடிய பேராசையே நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் என்பதுதான். பல கோடி சொத்துக்கு உரிமையாளராக இருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுசு வேண்டும். அப்பேற்பட்ட விலை மதிக்க முடியாத உயிருக்கு ஒரு ஆபத்து என்றால் சும்மாவா? கடந்த 2 வருட காலமாக கொரோனா என்ற பெரு நோய் தொற்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் ஆட்டி படைத்து பல உயிர் சேதங்களையும், பொருளாதார வறுமையையும் கொடுத்தது. நடப்பு ஆண்டில் கூட ஓரளவு குறைந்து அப்பாடா என பெரும் மூச்சு விட்டு முடிப்பதற்குள் மீண்டும் உருவெடுத்து தீவிரமாக பரவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இப்படி இருக்கையில் அதற்கு உறுதுணையாக மற்றொரு நோய் கூட தற்போது அனைவரையும் பயம் காட்டி பரவி வந்த மயமாக இருக்கிறது. அதாவது கடந்த 1970-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் முதல் முறையாக குரங்கு அம்மை என்ற கொடிய நோய் கண்டறியப்பட்டது. இந்த நோய் தற்போது மீண்டும் பரவ தொடங்கியது மட்டுமல்லாமல் கடந்த ஜூன் 14ம் தேதி இந்தியாவுக்கு அடியெடுத்து வைத்துள்ளது. அதாவது கேரளா மாநிலத்தில் முதல் குரங்கு அம்மை நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் 3 பேருக்கு நோய் பரவி பெரும் அச்சத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 7 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!
அதை தொடர்ந்து தற்போது 75 நாடுகளில் 16,000பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று ஜெனீவாவில் கேப்ரியாசெஸ் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானம் இது தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் நிருபர்களுக்கு காணொலி வாயிலாக கூறியது என்னவென்றால் ‘‘குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது’’ என கூறி மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளார்.