இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி – அதிர்ச்சியில் மக்கள்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி - அதிர்ச்சியில் மக்கள்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி - அதிர்ச்சியில் மக்கள்! மருத்துவர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி – அதிர்ச்சியில் மக்கள்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

கொரோனா பரவலால் ஏற்பட்ட இடையூறுகளில் இருந்து மக்கள் ஓரளவு மீண்டு வரும் நிலையில், இந்தியாவில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அதிருப்தியான சூழல் உருவாகி இருக்கிறது.

குரங்கு அம்மை

கடந்த 2 ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு உலக நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இந்த பெருந்தொற்று இன்று வரைக்கும் குறைந்தபாடில்லை. இதற்கிடையில் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஒரு பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில், இந்த குரங்கு அம்மை நோய் தற்போது 55 நாடுகளில் பரவி இருக்கும் நிலையில் இத்தொற்றால் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனந்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் – அரசு அறிவிப்பு!

இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா பரவலுடன் ஒப்பிடும் போது குரங்கு அம்மையின் பரவல் வேகம் குறைவாக இருப்பதாகவும், குரங்கு அம்மை நோய் பாதிப்புகள் குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்தலாம் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போது, தலைவலி, தசைவலி, முதுகுவலி, சொறி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் எவ்விதமான அலட்சியமும் செய்யாமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!