தடுப்பூசியால் குரங்கு அம்மையை கட்டுப்படுத்த முடியாது – WHO அதிர்ச்சி ரிப்போர்ட்!
உலக நாடுகளில் அதிக அளவு உயிரை பலி வாங்கிய கொரோனா வைரஸை அடுத்து தற்போது குரங்கு அம்மை காட்டுத்தீ போல் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கூடிய விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் எதிர்பாராத இழப்பை சந்திக்க நேரிடும் என இந்த தொற்றின் அவசர நிலையை குறித்து தற்போது உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குரங்கு அம்மை :
கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று வைரஸ் சுமார் 63,82,183 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளது. பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிக அளவு இருந்த போதிலும் அதிலிருந்து விடுபட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் பல உயிரிழப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மனித இனத்திற்கு அதுவும் குழந்தைகளுக்கு புதிய அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உருவாகியுள்ளது. இந்த தொற்றின் அவசர நிலையை குறித்து தற்போது உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, குரங்குகளிலிருந்து கண்டறியப்பட்ட இந்த குரங்கு அம்மையால் இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு அதிக அளவு பாதிப்பை இந்த குரங்கு அம்மை தொற்று ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுவரை 75க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்து வரும் குரங்கு அம்மை 70 சதவிகிதம் ஐரோப்பாவிலும், 25 சதவிகிதம் அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய்த் தொற்று பாதிப்பின் எதிரொலியாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை – ஆசிரியர்கள் வேண்டுகோள்
இதில் உடனடியாக கவனம் செலுத்தாவிட்டால் மரணம் வரை கொண்டு செல்லும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது நேற்று மேலும் ஒருவருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. எனவே தற்போது வரை இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குரங்கு அம்மை தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள இந்த நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் WHO வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக தடுப்பூசி இந்த தொற்றுக்கு எதிராக உடனடி தீர்வை கொடுக்காது என்றும் WHO திட்டவட்டமாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.