மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி நேரடியாக வீட்டிற்கே பணம் டெலிவரி!
இந்தியாவில் கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 2000 ஐ விவசாயிகளின் வீடுகளுக்கே அனுப்பும் ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி 2000 ரூபாய் பணம் நேரடியாக வீட்டுக்கே வழங்கப்படும்.
கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2,000 வீதம் ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அதன்படி இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஈடு செய்யும் விடுப்பு! அரசாணை வெளியீடு!
மேலும் இந்த தவணை தொகையை பெற இ-கேஒய்சி செயல்முறைகளை முழுமையாக முடிக்க வேண்டும். விவசாய பயனாளிகள் இந்த இ-கேஒய்சி செயல்முறையை வீட்டிலிருந்தே செய்யலாம். கடந்த மே 30ஆம் தேதியன்று பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11 வது தவணை வழங்கப்பட்டது. இதன் மூலம் 10 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை இந்த கிசான் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் தான் ரூ. 2000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனி விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று தொகையை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்திய தபால் துறை மூலம் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆப்கா பேங்க், ஆப்கே துவார் என்ற புதிய திட்டத்தை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் இனி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பிரதமர் கிசான் 2000 ரூபாய் பணம் நேரடியாக விவசாயிகளின் வீட்டுக்கே வழங்கப்படும். தபால் ஊழியர்கள் மூலம் இந்த பணம் வீட்டுக்கே சென்று வழங்கப்படும். இனி விவசாயிகள் தங்களின் வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என்பதை கூட போய் பார்க்க தேவையில்லை.