தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஈடு செய்யும் விடுப்பு! அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈடு செய்யும் விடுப்பு! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈடு செய்யும் விடுப்பு! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஈடு செய்யும் விடுப்பு! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் தற்போது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வரை ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஈடு செய்யும் விடுப்பு:

தமிழக அரசு ஊழியர்கள் பொது விடுமுறை நாட்களில் பணிபுரிவதற்கு பதிலாக வேறு நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒரு ஆண்டுக்கு 20 நாட்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அளிக்கப்படும். மேலும் இந்த விடுப்பை தற்செயல் விடுப்பு மற்றும் அரசு விடுமுறை ஆகியவற்றுடன் சேர்த்து 10 நாட்களுக்கு மிகாமல் ஒவ்வொரு 6 மாதத்திலும் எடுத்துக்கொள்ளலாம். இப்போது தமிழக அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த ஈடு செய்யும் விடுப்பு நாட்களை எடுத்துக்கொள்வது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை – முதல்வரின் முடிவு என்ன?

அந்த ஆணையில், அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் வேலை நாளில் இருக்க வேண்டும். இந்த பணி நாட்கள் பயிற்சி நாட்களாக இருந்தால் அதை வேலை நாளாக கருதலாம். ஆனால், விடுமுறை நாட்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடந்தால் ஆசிரியர்களுக்கு 10 நாட்களுக்கு மிகாமல் ஈட்டிய விடுப்பை வழங்கலாம். இப்போது விடுமுறை நாட்களில் நடைபெற்ற CRC பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மட்டும் ஈடு செய்யும் விடுப்பு எடுக்க தகுதியானார்கள் ஆவர். ஆனால், CRC பயிற்சியின் போது தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் ஈடு செய்யும் விடுப்பை எடுக்க முடியாது.

Exams Daily Mobile App Download

இந்த ஈடு செய்யும் விடுப்புகளுக்கு காலண்டர் ஆண்டை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, இதனுடன் கல்வியாண்டை இணைக்க கூடாது. மேலும், விடுமுறை பயிற்சி எடுத்த நாளில் இருந்து ஆறு மாதத்திற்குள் இந்த ஈடு செய்யும் விடுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் இந்த விடுமுறையை அரசு விடுமுறை மற்றும் தற்செயல் விடுமுறையுடன் இணைத்து தனியாகவும், மொத்தமாகவும் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக ஈடு செய்யும் விடுப்பை எடுக்கும் போது ஈடு செய்யும் விடுப்பு என்ற தலைப்பில் விண்ணப்பம் எழுதி அதை தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!