தமிழகம் முழுவதும் மீண்டும் கோவில்கள் திறப்பு – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் வருகிற 28ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் வரும் நாட்களில் ஊரடங்கு தளர்வுகளில் கோவில்கள் திறப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கோவில்கள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடிய நிலையில் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் என அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீண்டும் கோவில்கள் திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் – அமைச்சர் அறிவிப்பு!
இதையடுத்து தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் பாதிப்புகள் குறைவாக காணப்படும் மாவட்டங்களில் கோவில்கள் திறப்பு மற்றும் பேருந்துகள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கோவில்கள், கோவில் தொடர்பான கோரிக்கைகள் தெரிவிக்க மக்கள் சிறப்பு குறை கேட்கும் மையம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு? நிதா அம்பானி விளக்கம்!
இந்த மையத்தை சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் திறந்து வைத்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படுவதில் கோவில்கள் திறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கோவில்களில் நடைபெறும் குற்றங்களை பொதுமக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.