தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 100% தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் 100 சதவீத தடுப்பூசி எந்த பகுதியில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை விரைவாக மீட்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தடுப்பூசி வழங்கும் பணிக்கு மாநில அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 100 சதவீத தடுப்பூசி திருவாரூரில் உள்ள கிராமத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு? நிதா அம்பானி விளக்கம்!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கிராமங்கள் முதல் மலை வாழ்மக்கள் வரை என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு தற்போது சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் அதிக அளவில் மக்கள் வருவதால் அந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை!

மேலும் தமிழகத்தில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் அவர்கள் முயற்சியால் காட்டூர் என்னும் கிராமத்தில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முழுமையாக தடுப்பூசி செலுத்திய கிராமம் என்ற நற்பெயரை அந்த கிராமம் பெற்றுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோர் ,மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் காட்டூர் கிராமத்தில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழகத்திற்கு முன்மாதிரியான கிராமமாக காட்டூர் விளங்குகிறது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!