SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை!
இணையவழியில் மோசடி மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் படி SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு நெறிமுறைகளையும் SBI வெளியிட்டுள்ளது.
மோசடி எச்சரிக்கை
SBI வங்கி வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் வங்கி நிர்வாகம் மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தனது வாடிக்கையாளர்களுக்கு, இணைய குற்றங்களுக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கொரோனா போன்ற நோய் தொற்றுக்கு மத்தியில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடி மற்றும் சைபர் கிரைம் போன்ற நிகழ்வுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – விவரங்கள் இங்கே!
சைபர் கிரைம் உள்ளிட்ட மோசடிகளை தவிர்க்க 6 வழிமுறைகளை வங்கி பரிந்துரைத்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த SBI வங்கி நிர்வாகம், ‘வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். சைபர் கிரைம் உள்ளிட்ட குற்றங்களை தவிர்க்க தகவல்களின் பாதுகாப்பு முக்கியமானது. தனிப்பட்ட தகவல்களை பகிர்வது என்பது அக்கறை தரக்கூடிய விஷயம் அல்ல’ என தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் SBI வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்ளுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய அறிவிப்பு!
அதன் படி, சமூக வளைதளங்களில் தனிப்பட்ட விவரங்களை பகிரக்கூடாது, தடுப்பூசி விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட வேறு எந்த சான்றிதழையும் பகிர்ந்து கொள்ள கூடாது, நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் யாருக்கும் நிதி பரிமாறக்கூடாது, சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்யவோ அல்லது சந்தேகத்திற்கிடமான செய்திகளை திறக்க கூடாது, டெபிட் கார்டு விவரங்களை பகிரக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வேலை இத்தகைய மோசடிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.