PM KISAN திட்டத்தில் இணைந்த விவசாயிகள் கவனத்திற்கு – இந்த தவறை செய்தால் நிதியுதவி பெற முடியாது!
PM -kisan திட்டத்தின் மூலமாக ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரைக்கும் ஏழை விவசாயிகள் 11 தவணைகளில் நிதியுதவியை பெற்றுள்ளனர். விவசாயிகள் எந்தெந்த தவறை செய்தால் இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற முடியாது என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PM KISAN திட்டம்
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு பலவிதமான நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு பிரதம மந்திரி விவசாயிகள் திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 2000 வீதம் நிதியுதவி வாங்கி பயன் பெற்று வருகின்றனர். தற்போது வரைக்கும் PM KISAN திட்டத்தின் மூலமாக விவசாயிகள் 11 தவணைகளில் நிதியுதவி வாங்கி பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11 ஆவது தவணை கடந்த மே 31-ஆம் தேதி விவசாயிகளுக்கு வந்தடைந்தது. இந்தப் PM KISAN திட்டத்தின் கீழ் இணைந்துள்ள பத்தாயிரம் கோடி விவசாயிகளுக்கும் இந்த நிதியுதவி சென்றடைவதில்லை. இந்த பிரதமரின் பதினோராவது தவணைக்கான பணம் பல விவசாயிகளுக்கு வந்தடையவில்லை என புகார் எழுந்துள்ளது. PM KISAN திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிறிய தவறு செய்திருந்தாலும் கூட விவசாயிகளுக்கு தவணைக்கான பணம் கிடைக்காது.
Exams Daily Mobile App Download
இதனால் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது தங்களது பெயர், முகவரி என அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறையாக சரிபார்க்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் சிறிய எழுத்துப் பிழை இருந்தாலும் கூட இந்த நிதியுதவிக்கான பலனை விவசாயிகள் பெற முடியாது. மேலும் PM KISAN சம்மன் நிதி யோஜன திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணையும் சரியாக பதிவிட வேண்டும். ஆதார் எண்ணையும் தவறாக பதிவு செய்தாலும் கூட பலனை பெற முடியாது.