தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2021 – 2023ம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதன் படி 1 – 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த மே 2ம் தேதி ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற தொடங்கியது. இத்தேர்வானது மே 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 14ம் முதல் அம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. அதனை தொடர்ந்து 10,11,12 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மே 31ம் தேதி முதல் மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மேரா ரேஷன் ஆப் பற்றிய முக்கிய விவரங்கள்!
இதனையடுத்து பள்ளிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி பள்ளியில் மின் இணைப்புகளில் மின் கசிவு கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சத்துணவு கூடங்களில் சுத்தப்படுத்தி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
Exams Daily Mobile App Download
பள்ளிக்கும் பள்ளி திறக்கும் நாள் என்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல்கள் பள்ளியில் பெறப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு காலை சிற்றுண்டி வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.