தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை – ஆசிரியர்கள் வேண்டுகோள்!
தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையால் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், மாணவர்களுக்கு எங்களது சுய கருத்துக்களை பகிர கருத்து சுதந்திரம் வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணும் எழுத்தும்:
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய திட்டத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது, ஒவ்வொரு மாணவனுக்கும் இருக்கும் திறனை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற் போல ஆசிரியர்கள் மாணவனுக்கு பாடங்களை சொல்லி தர வேண்டும். எந்த வகையிலோ மாணவர்கள் அந்த பாடத்திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டால் போதும். ஆனால், ஆசிரியர்களை இதை செய்ய விடாமல் கஷ்டமான ஒன்றை புரிய வைக்க சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதாவது எளிமையாக A B C D சொல்லி கொடுப்பதற்கு பதிலாக எதற்காக 40க்கும் குறையாத பதிவேடுகளை உருவாக்க வேண்டும் எனவும், அந்த கையேடுகளை உருவாக்குவதிலேயே மொத்த நேரமும் போய்விடுகிறது எனவும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கட்டாயமாக பதிவேடுகளை தயார் செய்ய வேண்டும் என்பதால் மட்டுமே பயந்து அந்த வேலைகளை செய்ய வேண்டியதாக இருக்கிறது. எனவே, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தை மிரட்டும் குரங்கு அம்மை நோய் பரவல் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! அமைச்சர் விளக்கம்
இப்படி தான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும், இதைத் தான் சொல்லி தர வேண்டும் என்று கூறினால் எந்திரங்களை வைத்து பாடம் நடத்தலாமே எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். முதலில், ஆசிரியர்களுக்கு கற்றல் சுதந்திரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் சுதந்திரமாக எங்களது கருத்துக்களை பகிர வேண்டும் எனவும், மகிழ்ச்சியோடு ஆசிரியர்களை பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குவதாகவும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.