தமிழகத்தை மிரட்டும் குரங்கு அம்மை நோய் பரவல் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! அமைச்சர் விளக்கம்!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்றின் தாக்கம் நாட்டில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இந்த நோய் தாக்கம் ஏற்படாத வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்
குரங்கு அம்மை தொற்று :
அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. கேரளாவில் இதுவரை 3 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் நோய் அறிகுறி இருப்பவரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் குரங்கு அம்மை இல்லை என வந்துள்ளது. மத்திய அரசு இந்தியாவில் 15 இடங்களில் இந்த நோய்க்கான ஆய்வகம் அமைக்கப்படும் என தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் ஆய்வகத்தை இதற்காக பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்த அவர், அங்கே குரங்கு அம்மைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்
மேலும் சர்வதேச செஸ் போட்டிக்கு வந்த வீரர்களுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 விடுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரு வெளிநாட்டில் இருந்து வந்த செஸ் வீரர்களுக்கு லேசான அறிகுறி இருந்தது. ஆனால் அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் குரங்கு அம்மை நோய் இல்லை என வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.