தமிழகத்தில் சதமடித்த வெயில், அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!
தமிழகத்தில் இன்று முதல் வரும் 4 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை வெளியிடு:
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்து மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதத்தின் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் செவ்வாய் கிழமை (மார்ச் 22) அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவாகியுள்ளது.இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில், 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி உள்ளது.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
அதனை தொடர்ந்து, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 22.03.2022, 23.03.2022 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்தாக, 24.03.2022 முதல் 26.03.2022 ஆகிய தினங்கள் வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 21 நாட்கள் தற்செயல் விடுப்பு!
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாக இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.