தமிழக அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 21 நாட்கள் தற்செயல் விடுப்பு!
தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்செயல் விடுப்பு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்தனர். இதனால் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
அந்த வகையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அனைத்தும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறைக்கு அரசு அனுமதி அளிக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாது தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.