தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழ்நாட்டை பொறுத்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை சமீப காலங்களில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. சில மாநிலங்கள் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேச அரசுகளைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் திமுகவின் தேர்தல் வாக்கு உறுதிகளில் ஒன்றாக இதுவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக மார்ச் 31க்குள் நீக்கம்? ஒன்றிய அரசு கடிதம்!

இந்நிலையில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாக இருந்த இந்த திட்டத்தை மீண்டும் நிறைவேறாத காரணத்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை அம்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணை தலைவர் செல்வேந்திரன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆதிலட்சுமி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குமரேசன் ஆகிய பல்வேறு ஆசிரியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இருந்தனர். மேலும் அங்கு நூற்றுக்கணக்கான ஆசிரியர்-ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பி உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!