வாட்ஸ் அப் முடங்கியதற்கு காரணம் இதுதான் – அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட மெட்டா நிறுவனம்!
உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியானது நேற்று (அக்.25) திடீரென 2 மணி நேரம் செயலிழந்தது. இதனால் பயனர்கள் செய்திகள், வீடியோ மற்றும் ஆடியோக்களை அனுப்ப முடியாமல் போனது. தற்போது இது குறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வாட்ஸ் அப்:
உலகின் நம்பர் 1 தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் செயலி நேற்று 2 மணி நேரமாக முடங்கியது. அதனால் பயனர்களால் எந்த வித செய்திகளையும் பகிர முடியவில்லை. அதே போல வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை டவுன்லோட் செய்ய முடியவில்லை.
Follow our Instagram for more Latest Updates
இதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பினர். இதனையடுத்து பிற சமூக வலைத்தளங்களில் #whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது. இது குறித்து மெட்டா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது வாட்ஸ் அப் செயலியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக தெரிவித்தது. அது போலவே இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பழையப்படி வாட்ஸ் அப் செயல்பட தொடங்கியது.
சென்னையின் பரப்பளவை விரிவாக்க அரசாணை வெளியீடு – 1,225 கிராமங்கள் இணைப்பு!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் செயலி முடங்கியது. மேலும் நிறுவனத்தின் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின் விளைவாகவே வாட்ஸ் அப்பில் சில மணி நேர முடக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த பிரச்சனை முழுவதுமாக சரி செய்யப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் இது போல நடக்காது என்றும் வாட்ஸ் அப் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.