சென்னையின் பரப்பளவை விரிவாக்க அரசாணை வெளியீடு – 1,225 கிராமங்கள் இணைப்பு!
சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை:
அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து தமிழகத்தின் அடையாளமாக திகழ்ந்து வருவது சென்னை. ஆனால் சென்னையின் பரப்பளவானது மிகவும் குறைவானதாகவே உள்ளது. தற்போது சென்னையின் புறநகர் பகுதிகள் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையின் பரப்பளவை விரிவாக்குவது குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
1,189 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கும் சென்னையை 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவுபடுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNDTE தமிழக தட்டச்சு தேர்வு தேதி திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் 550 கிராமங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44 கிராமங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 335 கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 கிராமங்கள் என மொத்தம் 1,225 கிராமங்கள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை கிராமங்கள் சென்னையுடன் இணைக்கப்படவுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.