தமிழகத்தில் 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 32,208 கோடி ரூபாய் முதலீட்டில் 76,795 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு – அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
அவ்வாறு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் தமிழகம் 75 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற லட்சியத்தை அடைந்து விரைவில் உச்சத்தை எட்டிவிடலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரை 3 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக தற்போது அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.56,229.54 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.