சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை – போக்குவரத்து வழித்தடங்கள் இடமாற்றம் அறிவிப்பு!
தற்போது வடகிழக்கு பருவமழையால் சென்னையில் அநேக இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அநேக இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏராளமான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த வகையில் சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் அநேக இடங்களில் நீர் நிரம்பி தேங்கியுள்ளன. இதனால் வாகன போக்குவரத்து மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளது. இதனை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. அத்துடன் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பை குறைக்கும் விதமாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்று சாலைகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சென்னையில் தற்போது நீர் தேங்கியுள்ள சாலைகளான ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை, கே.கே.நகர் ராஜமன்னார், வளசரவாக்கம் மெகா மார்ட் சாலை, வாணி மஹால் போன்ற இடங்களாகும். இவ்வாறு தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் அண்ணா பிரதான சாலையில் மழைநீர் வடிகால் வாரியம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இப்பணியை எளிதாக்கும் வகையில் அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு – அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
அத்துடன் கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து 2வது அவென்யூவை நோக்கி திருப்பி விடப்பட்டது. மேலும் வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ஆற்காடு ரோடு செல்ல கேசவர்தினி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இவையெல்லாம் சென்னை மாநகரில் கனமழை காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்ட வழித்தடங்கள் ஆகும்.