தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு? வைரலாகும் மீம்ஸ்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது குறித்து அரசு ஆலோசனை செய்து வரும் நிலையில் பரிசுத்தொகை வழக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் பொங்கல் பரிசுத்தொகை குறித்து மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
பொங்கல் பரிசுத்தொகை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதை அடுத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆண்டுத்தோறும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். அதனுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும். அதே போல இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ஆனால் ரொக்கத்தொகை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், கட் ஆப் மதிப்பெண்கள்!
பொங்கல் பரிசுத்தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முழு கரும்பும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி அறிமுகம்!
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அறிவிப்பில் பொங்கல் பரிசுத்தொகை குறித்த எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. திமுக ஆட்சியிலும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இது குறித்து அரசு ஆலோசனை செய்து வரும் நிலையில் பொங்கல் பரிசுத் தொகை குறித்து மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.