தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – மெகா முகாம் மாற்றம்!
தமிழகத்தில் அடுத்த வாரம் சனிக்கிழமை அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அன்று நடைபெற இருந்த 23 வது மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெகா தடுப்பூசி முகாம் ரத்து:
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணிகள், தேர்தல் விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் கவனத்திற்கு – போலீசார் எச்சரிக்கை!
இந்த நிலையில் தேர்தல்(19 ம் தேதி )நாளன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கொரோனா தடுப்பூசி பெருமளவு குறைத்து வருகிறது. இந்த வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது வரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த வகையில் இன்று 22 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் கூறியுள்ளார்.
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 70.42% பேர் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இளம் சிறார்களுக்கான தடுப்பூசி 80.90% பேர் போட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த வாரம் சனிக்கிழமை 23 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருந்த நிலையில், அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.