IPL 2022 திருவிழா ஆரம்பம் – பிப்.12 இல் தொடங்கும் வீரர்கள் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
2022 ஐபிஎல் ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேர அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் இந்த ஆண்டுக்கான IPL ஏலம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. தற்போது மெகா ஏலம் நடைபெறும் தேதி குறித்து இன்று BCCI அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
IPL மெகா ஏலம்:
இந்த ஆண்டு 15 வது சீசனுக்கான IPL ஏலம் மெகா ஏலமாக நடைபெறவுள்ளது . இதற்கு IPL யில் பங்கேற்கும் அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இம்முறை இரண்டு புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்த்து, ஐபிஎல் 2022 யில் மொத்தம் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. போட்டிக்கு முன்னதாக 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது. மும்பை இந்தியன்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – கோவின் தளத்தில் பதிய ஆதார் அவசியமில்லை!
2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில் புதிதாக விளையாடும் அணிகளுக்கு யார் கேப்டனாக வழிநடத்துவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அகமதாபாத் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இதை தொடர்ந்து அகமதாபாத் பிரான்சிஸ் அணி IPL தொடரில் இதற்கு முன் சிறப்பாக விளையாடிய 3 வீரர்களை குறிவைத்துள்ளது. மேலும் லக்னோ அணி ஆஸ்திரேலியா வீரர் ஸ்டோனிஸ் 9.2 கோடிக்கும் ,ரவி பிஷ்நோய் 4 கோடிக்கும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அகமதாபாத் அணி ரஷித் கான், கில் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
Post Office ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.13,74,000 ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 27 தொடக்க ஆட்டத்திற்கான தற்காலிக தேதியாகும். இப்போட்டிக்கான மைதானமாக மும்பை மற்றும் புனேவை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இந்நிலையில் இன்று 2022 ஐபிஎல் ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேர அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி IPL ஏலம் இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளதாக BCCI அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் மெகா ஏலம் இரண்டு நாட்களில் காலை 11 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை IPL உரிமையானது விவோவில் இருந்து டாடாவிற்கு மாறியுள்ளது.