கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – கோவின் தளத்தில் பதிய ஆதார் அவசியமில்லை!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்ய உருவாக்கப்பட்ட கோவின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரு நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் 40 வயதினருக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி பிறகு 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
Post Office ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.13,74,000 ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்காக கோவின் இணையதளத்தை அறிமுகம் செய்தது. இதில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட்டு முன்பதிவு செய்து விட்டு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம். இந்த கோவின் இணையதளத்தில் ஆதார் அட்டை வலியுறுத்தப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கோவின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் B.Ed பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்வு வழிகாட்டுதல்கள்!
கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்கு செலுத்த முன்பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றும், ஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஒன்பது அடையாள ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. சிறை கைதிகள், மனநல காப்பகங்களில் உள்ளவர்கள் போன்றோர் அடையாள அட்டைகள் இல்லாத பிற வகை நபர்களுக்கு வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.