Post Office ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.13,74,000 ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் மூத்த குடிமக்கள் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை பார்க்கலாம்.
மூத்த குடிமக்கள் திட்டம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறைகளில் சேமிக்க முடிவு செய்தனர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கினர். ஏனெனில் இதில் குறைந்த நாட்களில் அதிகளவு பணத்தை சேமிக்க முடிகிறது. மேலும் இதில் செலுத்தப்படும் முதலீடுகள் சந்தை ஏற்ற இறக்கங்களால் மாறுவதில்லை.
தமிழகத்தில் B.Ed பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்வு வழிகாட்டுதல்கள்!
தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம். இதில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 55 வயது முதல் 60 வயது நிரம்பியவர்களும் மற்றும் VRS எடுத்தவர்களும் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் வரிச் சலுகைகளும் பெற முடிகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி தொகை ஆண்டுக்கு ரூ. 50,000க்கு மேல் இருந்தால் TDS கழித்து தரப்படும். மேலும் வட்டி தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்தால் படிவம் 15G/15H ஐ சமர்ப்பித்து TDS இல் இருந்து நிவாரணம் பெற முடியும்.
ICC T20 உலகக்கோப்பை திருவிழா – ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த IND vs PAK போட்டி டிக்கெட்டுகள்!
மேலும் இந்த திட்டத்தில் உள்ள கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றக்கூடிய வசதிகளும் உள்ளது. மூத்த குடிமக்கள் திட்டத்தில் 10 லட்ச ரூபாயை முழுவதுமாக முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும் போது 13,70,000 லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும். அதாவது ஒரு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு வட்டி தொகை 3,70,000 ரூபாய் வரை பெற முடிகிறது. இந்த தொகை மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதால் இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.