தமிழகத்தில் B.Ed பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்வு வழிகாட்டுதல்கள்!

0
தமிழகத்தில் B.Ed பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் தேர்வு வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் B.Ed பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் தேர்வு வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் B.Ed பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்வு வழிகாட்டுதல்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த தேர்வை நடத்துவதற்கான விதிமுறைகளை குறித்து தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு விதிமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும் அத்துடன் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி வருகிற பிப்ரவரி 10ம் தேதி முதல் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் பி.எட் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டுதல்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தேர்வு வாரியம் அறிவித்தபடி தேர்வுகள் அனைத்தும் நடைபெறும். ஆன்லைன் வழி தேர்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – நடிகை சரண்யா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!

இந்த தேர்வு எழுத கருப்பு நிற, ‘பால் பாய்ன்ட்’ பேனா மட்டும் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். கல்லூரிகளுக்கு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் யாரும் வரக்கூடாது. தேர்வு தொடங்கும் 30 நிமிடத்திற்கு முன் கல்லூரி சார்பாக வினாத்தாள் ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த வினாத்தாள் காலை 9:30 முதல் 10:30 மணி வரை இணையதளத்தில் இடம் பெறும். இதையடுத்து தேர்வு முடிந்த 1 மணி நேரத்துக்குள் விடைத்தாளை ஸ்கேன் செய்து பி.டி.எப்., வடிவில் கல்லூரி முதல்வருக்கு அனுப்ப வேண்டும். மேலும் அசல் விடைத்தாள்களை இந்த தேர்வுகளின் இறுதி நாள் அல்லது மறுநாளுக்குள் விரைவு அல்லது பதிவு தபால் மூலமாக கல்லூரி முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!