மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை – இந்த ஆண்டு முதல் துவக்கம்!
ராமநாதபுரத்தில் ரூ.455 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் கட்டிட பணிகள் ஏறத்தாள முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.
மருத்துவ கல்லூரி:
ராமநாதபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் ரூ.455 கோடி செலவில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கட்டிட பணிகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக நடப்பு ஆண்டு முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூலை 5க்கு மேல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் – வெளியான தகவல்கள்!
தற்போது இது குறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் மலர் வண்ணன் அவர்கள் கூறியதாவது, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் அளவிற்கு முடிந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனைத்து வகையான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விரைவில் நேரடியாக வந்து கட்டிடத்தை பார்வையிட உள்ளனர். அவர்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். மேலும் அதற்கு ஏற்றவாறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மையமும் அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடமும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் திறக்கப்பட்டால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.