அரசு பள்ளிகளில் சத்துணவில் தினை வகைகள் சேர்க்க முடிவு – பிரபல நிறுவனத்தின் சூப்பரான திட்டம்!!
தற்போது மாணவர்களுக்கிடையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை சரி செய்யும் பொருட்டு அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுகளில் தினை வகைகளை மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.
தினை வகைகள்
தற்போது பள்ளி மாணவர்களுக்கிடையே முறையான சரிவிகித உணவு இல்லாததால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கின்றனர். இதனால் எளிதில் இவர்களுக்கு நோய் தொற்று தாக்குகிறது. இதனை தடுக்கும் விதமாக மகாராஷ்டிரத்தில் பிரபல நிறுவனம் சூப்பரான திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க முழு விபரம் உள்ளே!!
மகாராஷ்டிராவில் புனேவில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் பள்ளி மாணவர்களின் சத்துணவுகளில் தினை வகைகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சிறு,குறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து திணை வகைகளை பெற்று விற்பனை செய்து வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இத்திட்டத்தை முதற்கட்டமாக புனேவில் இருக்கும் புரந்தாரா தாலுகாவில் 7 அரசு பள்ளிகளில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டம் குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.