தமிழகத்தில் MBBS, BDS படிப்புகளுக்கான வகுப்புகள் நாளை முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடங்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் தற்போது கொரோனா பரவல் மேலும் குறைந்து வருவதால் நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் தொடங்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி டிக்கெட் எடுப்பது ஈஸி! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும் இது தொடர்பாக மருத்துவக்கல்வி இயக்ககம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இதில் தெரிவித்ததாவது, நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி 14ம் தேதி நாளை முதல் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும். உணவு கூடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
அத்துடன் நூலகத்தில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக அமருவதை தவிர்க்க வேண்டும். மேலும் கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வருகை தரும் அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், உணவு உட்பட விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலை பதிவு கட்டணம், காப்பீடு ஆகிய கட்டணங்கள் ஏதும் வசூலிக்க கூடாது என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.