ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி டிக்கெட் எடுப்பது ஈஸி! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக க்யூ ஆர் கோடு (QR Code) மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரயில் பயணிகள் தங்களாவே டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்.
ரயில் டிக்கெட்:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் முக்கிய வழித்தட ரயில்கள் சுற்றுலா ரயில்கள், சிறப்பு ரயில்கள் போன்றவை ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்தது. பயணிகள் வருகை இல்லாததால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகிறது. அதனால் மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயங்கி வருகிறது.
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!
இந்த நிலையில் ரயில்வே துறை புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ரயில் தொகுப்பாளினிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது க்யூ ஆர் கோடு பலகை மூலம் ரயில் டிக்கெட் பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் எடுக்க பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தையும் கால தாமதத்தையும் தவிர்க்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
பிப்.14 முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – அரசு அறிவிப்பு!
அதில் சென்னையில் விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதை தவிர்க்க தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் பெறுவதற்கு டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளலாம்.யோகம் செய்யும் இயந்திரத்தில் ‘க்யூ ஆர்’ கோடு (QR CODE) மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.