பிப்.14 முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – அரசு அறிவிப்பு!

0
பிப்.14 முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் - அரசு அறிவிப்பு!
பிப்.14 முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் - அரசு அறிவிப்பு!
பிப்.14 முதல் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – அரசு அறிவிப்பு!

உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் பிப்ரவரி 14 முதல் 19 வரை 144 தடை உத்தரவை துணை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

144 தடை உத்தரவு:

கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து பெண்கள் வகுப்பிற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து அந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அனைவரும் ஹிஜாப் தங்களது உரிமை என்றும், அதை அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது என்றும் கூறி போராட்டத்தை நடத்தினார்கள். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் மாறி விட்டது. இதற்கான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் பிப்.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய உத்தரவு – நெல் தரிசில் பயறு சாகுபடி!

உயர்நீதிமன்றம் விரைவில் இதற்கான தீர்பை அளிக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இன்னும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை. இதனால் அங்கு பதற்றத்தை குறைக்கும் வகையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 144 தடை உத்தரவை துணை ஆணையர் பிறப்பித்துள்ளார். ஹிஜாப் – காவி சால்வை சர்ச்சையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்தப் உத்தரவு அமலில் இருக்கும்.

தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு – 3,803 காலிப்பணியிடங்கள்!

அனைத்து உயர்நிலைப் பள்ளிகளையும் சுற்றி 200 மீட்டர்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டி.சி.குர்மா ராவிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின்படி, பள்ளியின் சுற்றளவைச் சுற்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடுவது அனுமதிக்கப்படாது. ஒரு தனிநபரின் தனிப்பட்ட நம்பிக்கை அல்லது மதத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் அல்லது போராட்டங்கள் உட்பட அனைத்து வகையான கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. குச்சிகள், தடிகள், கத்திகள் அல்லது கொடிய ஆயுதங்களைக் கொண்ட பொருட்களை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தூண்டுதல் கோஷங்கள், பாடல்கள், பேச்சுக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!