தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு – 3,803 காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் இருக்கும் 3,803 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த காலிப்பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்படும் பட்டியலை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்யப்படும் என்று பெரியசாமி உறுதி அளித்துள்ளார்.
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
இந்த நிலையில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழுநேர நியாய விலை கடைகளும் மற்றும் 9639 பகுதி நேர நியாய விலை கடைகள் என மொத்தமாக 33,141 கடைகள் இயங்கி வருகிறது. இதில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
நியாய விலை கடைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதால் 3,836 விற்பனையாளர்கள் தலா ஒரு நியாயவிலை கடையினை கூடுதலாக கண்காணித்து வருகின்றனர். ஒரே ஒரு பணியாளர் இரண்டுக்கும் மேற்பட்ட கடைகளை கையாளுவது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. அத்துடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் கடையின் விற்பனையாளர் ஒரே ஒரு முழுநேர நியாயவிலை கடையினை மட்டும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதனை இணைபதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்