TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
தமிழக கூட்டுறவுத் துறை தணிக்கை பிரிவு உட்பட 8 உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அண்மையில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியோர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது. கூட்டுறவுத்துறையில் உள்ள தணிக்கை பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் 30ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் மேலும் அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும் SC/ST பிரிவினர், விதவைகள், நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக 56,100 – 1,77,500 வரை வழங்கப்படும்.