தமிழகத்தில் மே 20 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் மே 20ஆம் தேதி 124வது மலர் கண்காட்சி நடைபெற இருப்பதால் நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மே 20ஆம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரை உள்ள ஐந்து நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. மலர் கண்காட்சிக்காக ஜனவரி மாதத்தில் இருந்தே பல வகையான மலர் செடிகள் நடும் பணி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 275 வகைகளில் 5.5 லட்சம் மலர்கள் அந்த மலர் கண்காட்சியில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாடங்கள், கண்ணாடி மாளிகையை அலங்கரிப்பதற்காகவே பல ஆயிரக்கணக்கில் தொட்டிகளில் பலவகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டம் அமல் – அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!
அவ்வப்போது மழை பொழிவும் இருந்து வருவதால் மலர்ச்செடிகள் அனைத்தும் நன்றாக வளர்ந்து பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த ஊட்டி மலர் கண்காட்சியை மே 20ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி நடைபெற இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த மே 20ம் தேதியான வெள்ளிக்கிழமை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 20ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருக்கும் காரணத்தினால் அந்த பொதுத்தேர்வு வழக்கம்போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 20ஆம் தேதி விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஜூன் 4-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.