மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டம் அமல் – அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!
புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல பாதகமான அம்சங்கள் இடம் பெற்ற காரணத்தினால் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை ஏற்று தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஆகியுள்ளது.
பழைய ஒய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றன. இதனால் புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாமெனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அவ்வப்போது அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது இல்லை.
TCS, Infosys, HCL நிறுவனங்களில் முடிவுக்கு வரும் WFH? – ஐடி துறை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக திமுக சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 2004ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசின் சுகாதார அமைப்பின் கீழ் இணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான பலன்களை அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.