தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – மே 13 கடைசி வேலை நாள்!
தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு மற்றும் வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கை ரத்து செய்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த மாதம் 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தினசரி நேரடி வகுப்புகள் வழக்கம் போல தொடங்கியது. இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திருப்புதல் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொழிற்கல்வி பாட தேர்வு விளக்கம்!
அதனை தொடர்ந்து பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நிறைய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் விரைந்து பொதுத் தேர்வுக்கான பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது.
ரேஷன் கார்டு இல்லையென்றாலும் பொருட்களை வாங்க முடியும் – அரசின் சூப்பர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 11ம் வகுப்பிற்கு மே 9 முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மே 30 ஆம் தேதி அன்று வெளியிடப்படும். அதன் பிறகு புதிய கல்வியாண்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதியும் மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 13 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.