தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மகப்பேறு விடுப்பு குறித்து விளக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
மகப்பேறு விடுப்பு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முக ஸ்டாலின் தலைமையிலான திமுக, ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா பேரிடரின் போது ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுமுறையும் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உண்டு – புதிய ட்விஸ்ட்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் அறிகுறிகள் உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் போன்றோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால் 7 முதல் 14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கவும் மனித வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளது. இதில் தற்போது குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதாவது குழந்தை பிறந்து சிறிது காலத்திலேயே இறந்துவிட்டாலும் அவர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.