தமிழகத்தில் தீப்பெட்டியின் விலை இன்று முதல் ரூ.2 ஆக உயர்வு – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளின் விலையானது 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஒரு தீப்பெட்டியின் விலை ரூ.2க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீப்பெட்டியின் விலை உயர்வு:
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டியின் விலை கடந்த 14 ஆண்டுகளாக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டியை பொதுவாக மக்கள் தீபம் ஏற்றுவது முதல் வீட்டில் சமையல் செய்வது என பல்வேறு அன்றாட வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஒரு தீப்பெட்டி வாங்கினால் அதனை நீண்ட நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம்.
LIC பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் கவனத்திற்கு – பொது அறிவிப்பு வெளியீடு
கடந்த சில தினங்களாக பல்வேறு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தீப்பெட்டியும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தீப்பெட்டியின் விலையானது இன்று முதல் ரூ.2க்கு விற்பனை செய்யப்படும் என்று உற்பத்தியாளர்கள் சார்பில் தகவல் வெளியிடபட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில் தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் மின்சாரம் மற்றும் வாகனங்களுக்கான வாடகையும் அதிகரித்துள்ள காரணத்தால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஊழியர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!
கடந்த 2007ம் ஆண்டு முதல் தீப்பெட்டியின் விலை மாற்றம் இல்லாமல் ரூ.1க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. உற்பத்தி சம்பந்தமான அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் தீப்பெட்டி விலை ரூ.2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 1 பண்டல் தீப்பெட்டியின் விலை ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அமலுக்கு வந்துள்ள விலை உயர்வினால் இனிமேல் 1 பண்டல் தீப்பெட்டியின் விலை ரூ.20க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.