LIC பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் கவனத்திற்கு – பொது அறிவிப்பு வெளியீடு
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் பணியாற்றும் பாலிசிதாரர்கள் பங்கு வாங்க விரும்பினால் கண்டிப்பான முறையில் DEMAT கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பாலிசிதாரர்கள் கவனத்திற்கு:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் சுமார் 29 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் மூலம் 38 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கிறது. அதனால் ஒன்றிய அரசு LIC நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிட்டு அதன் மூலமாக இதனை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் எல்.ஐ.சி.யை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை ஏற்க முடியாது என்று ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறையில் பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு – தொடரும் புகார்கள்!
இந்நிலையில் பாலிசிதாரர்களுக்கு ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக புது அறிவிப்பு ஒன்றை எல்.ஐ.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு DEMAT கணக்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதேபோல் பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் உடனடியாக DEMAT கணக்கு தொடங்க வேண்டும் என்றும் எல்.ஐ.சி. அறிவித்துள்ளது. DEMAT கணக்கு தொடங்க மற்றும் பராமரிக்க ஏற்படும் செலவுகளை பாலிசிதாரர்களே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற முகவர்களை அணுகலாம் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காவலர் வசிக்கும் வீடுகள் பெரியாதக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
பாலிசிதாரர் என்பது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கி பிரீமியம் செலுத்தும் நபர் என்று குறிப்பிடப்படுவார். பாலிசிதாரர் இறந்தால் சில திட்டத்தின் மூலமாக அவருடைய குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதி உதவி கிடைக்கும். மேலும் பாலிசிதாரர்கள் PAN கார்டு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் PAN கார்டு இல்லாத பாலிசிதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த தனியார் மயமாக்கப்படும் முடிவு பாலிசிதாரர்கள் மத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.