புதுச்சேரியில் மாணவர்களுக்கு கட்டாய முகக்கவசம் – ஆட்சியர் பரிந்துரை!!

0
புதுச்சேரியில் மாணவர்களுக்கு கட்டாய முகக்கவசம் - ஆட்சியர் பரிந்துரை!!
புதுச்சேரியில் மாணவர்களுக்கு கட்டாய முகக்கவசம் - ஆட்சியர் பரிந்துரை!!
புதுச்சேரியில் மாணவர்களுக்கு கட்டாய முகக்கவசம் – ஆட்சியர் பரிந்துரை!!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனால் மாநில அரசுகள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.  இந்த நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.

முகக்கவசம்

நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனாவின் BF7 வகை வைரஸ் சில மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதனால் மத்திய அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளிடம் அறிவுறுத்தி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இதில் குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்துள்ளார்.  இது போன்று தொற்று அதிகம் ஏற்படும் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!