தமிழக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பெண் கணக்கீடு தொடக்கம்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள், இன்று முதல் தொடங்கியுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிந்தவுடன் விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. வீட்டிலிருந்தே பொதுத்தேர்வுக்கு தயாராகும் படி அரசு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுறுத்தியது. திருப்புதல் தேர்வுகள், அலகு தேர்வுகள் போன்றவை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பானது தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. இதற்கிடையில் தேர்வு நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லாமல் இருந்தது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
முதலில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த வருடம் ரத்து செய்வதாக அறிவித்தது. தமிழகத்தில் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்கள் , மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் போன்றோரிடம் கருத்துக்களை கேட்டது. அதன் பிறகு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து. மேலும் தேர்வு நடைபெறாததால் மதிப்பெண்கள் மதிப்பீடு முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு குழு ஒன்றை நியமித்தது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில், 10ம் வகுப்பு மதிப்பெண், 11ம் வகுப்பு மதிப்பெண், 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை வைத்து பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. அதன் படி இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி 30ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eppo result varum