தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 29ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு முறை குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
மாணவர்களுக்கு கொரோனா பரவல் குறைந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும். தற்போது கொரோனா பரவல் குறைந்தாலும் பல பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஐ.சி.எம்.ஆர்., வழிகாட்டல், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைகள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை பெற்று, முதல்வருடன் ஆலோசனை செய்த பின்பு தான், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Open the school quickly as possible.