தமிழகத்தில் மார்ச் 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 5000 நபர்களை தேர்வு செய்ய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

0
தமிழகத்தில் மார்ச் 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 5000 நபர்களை தேர்வு செய்ய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
தமிழகத்தில் மார்ச் 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 5000 நபர்களை தேர்வு செய்ய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
தமிழகத்தில் மார்ச் 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 5000 நபர்களை தேர்வு செய்ய திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

திருவாரூர் மாவட்டத்தில் வேலைநாடுநர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் 04.03.2023 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முகாமானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் மார்ச் 4ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் விற்பனை, தொழில், சேவை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் சுமார் 5000 நபர்களை பணியிடங்களுக்கு தேர்வு செய்யவுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை கல்வி தகுதி பெற்ற இளைஞர்கள், மாற்று திறனாளிகள் என அனைவரும் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்போர் முன்கூட்டியே இணையதளம் வாயிலாக முன் பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை – பிப்.25 முதல் 27ம் தேதி வரை!

முன்பதிவு செய்யும் முறைகள்:
  • www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து
    உள்நுழையவும்.
  • அடுத்து வரும் முகப்பு பக்கத்தில் “Job Fair List” என்பதை கிளிக் செய்து நீங்கள் பங்கேற்கவுள்ள முகாம் அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • பிறகு Apply கொடுத்து விவரங்களை நிரப்பவும். இறுதியாக முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்டு உங்களது இ – மெயில் ஐடிக்கு தகவல் அனுப்பப்படும்.
  • இதனை பிரிண்ட் எடுத்து வைத்து கொண்டு வேலை நாடுநர்கள் முகாமில் பங்கேற்கலாம். அத்துடன் உங்களின் ஆதார், சுய விவர குறிப்பு, கல்வி தகுதி சான்றுகள் ஆகியவற்றையும் எடுத்து செல்ல வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!